அப்பிச்சிமார் வரலாறு
இன்றைய நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வாழவந்தி நாட்டு பிள்ளைக்கரையாற்றூரில் புதிதாகத் திருமணமான எழுபது வேட்டுவ கவுண்டர்[1][2] சமூக வாலிபப் போராளிகள் , தாரமங்கலம் அருகே ஆவணிப்பேரூரில் ஆண்ட பூவாணிய நாட்டுப் பொத்தி மன்னன் என்ற வேட்டுவருடன் நடந்த போரில், தங்கள் நண்பர்களும், கூட்டாளிகளுமான பூந்துறை நாட்டுக்கவுண்டர்களுக்காகத் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்தனர் . கொமாரபாளையம் ஆலத்தூரில் எல்லைப் போர் நடந்தது . இவர்களின் மணப்பெண்கள் அருகில் உள்ள காப்பறா மலையில் அவர்களுடன் சதியில் உடன்கட்டையேறி அர்த்தநாரீசுவரரை அடைந்ததாக அப்பிச்சிமார் காவியம் கூறுகிறது.
மசரி அம்மன்
மசரி என்ற இசுலாமிய[3] பெண்ணின் மகன்களான தனுக்காமன், வாதுருகார் (பகதூர் கான்) என்ற இரண்டு சகோதரர்களும் போரில் அப்பிச்சிமாருக்காக இறந்தனர். இதனால் மசரி அம்மனுக்கு பலி பூஜைகள் உண்டு. திங்களூரில் காத்தியவாதியான பூசாரி ஆண்டமுத்துக்கவுண்டரால் மசரி அம்மனுக்கான வடக்கு பலிபூஜை வாசல் அடைக்கப்பட்டது. இவ்வழக்கம் நிறுத்தப்பட்டது.
வழிபாடு:
திங்களூர், சிங்காநல்லூர், ஓடப்பள்ளி மற்றும் திடுமல் ஆகிய இடங்களில் உள்ள அப்பிச்சிமார் மடங்கள் எனப்படும் இடங்களில் இந்நாயகர்கள் தெய்வமாக வணங்கப்படுகிறார்கள். அறுபது வேட்டுவர்களும் சைவ தெய்வங்களாக இருந்தாலும், முஸ்லிம் மாவீரர்களது தாயான மசரி அம்மனுக்குத் தனியாக மிருகபலி கொடுக்கப்படுகிறது. பூந்துறை நாட்டிலுள்ள கொங்கு வேளாளர் கவுண்டர் நாட்டார் மற்றும் வேட்டுவ கவுண்டர்களின் பெருந்தாலி பிரிவைச் சேர்ந்தவர்களாலும் குலதெய்வமாக வணங்கப்படுகின்றனர்.
அப்பிச்சிமார் காவியம்: https://archive.org/details/20241109_20241109_1134
அப்பிச்சிமாரை நாட்டு காவல் தெய்வமாக வணங்கும் வெள்ளாளர்,
அண்ணமாரை காணியாட்சி குல தெய்வமாக வணங்கும் வேட்டுவர்..முழுமை ஆதாரங்களோடு
https://annamarstory.blogspot.com/2010/04/annamar-swami-kathai-pichai-pattan.html?m=1
வேட்டுவர் வேளாளர் போட்டி, குழப்பங்களை உருவாக்கியது சர்க்காரின் தவறான ஜாதி செர்டிபிகேட்களே!
முத்துசாமிக்கோனார் "கொங்குநாடு" புத்தகத்தில் அப்பிச்சிமார் பற்றி:
மசரி அம்மன் சிறப்பும், திங்களூர் மடத்தின் நிலையும:
திங்களூரில், எல்லா மசரியம்மன் கோயில்கள் போலவே மசரி அம்மனுக்கான தனி பலிபூஜை வாசல் உள்ளது:
மசரி, திருமூலர் திருமந்திரத்தில் குறிப்பிடும் 9 சிவ ஆகமங்களுள் ஒன்றான சாக்த ஆகமமான யாமளத்தின்படி பலி பூஜைகள் உடையவள் ஆவாள்: https://archive.org/details/20241109_20241109_1134/page/n117/mode/1up
யாமளம் பற்றிய எனது தளம்:
இதனால் மடப்பூஜைக்கு உள்ளவர் ஆசார்ய அபிஷேகம், தீக்ஷா குருவான குலகுருவான சைவசித்தாந்தரான பட்டையக்காளிபாளையம் மடாதிபதியால் (https://kongukulagurus.blogspot.com/2009/09/52_1.html?m=1) நடத்தப்பட்டாலும், பூசாரி இறந்தவுடன் பட்டத்தை இறக்க சாக்த யாமள பூசாரியான ஸ்தலத்து, காளிகோயில் பண்டாரமே மோக்ஷ குருவாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
நாத்திகமான சமண மதத்தவளான புத்லிபாய் மகன் காந்தியின் சீடரான பூசாரியாக ஆண்டமுத்துக்கவுண்டர் வாழ்ந்த காலத்தில் கட்டாயப்படுத்தி மசரி அம்மனது பலி வாசலான வடக்குவாசல் யாமள ஆகம விரோதமாக அடைக்கப்பட்டது:
பக்தர்கள் குறைதீர்க்க தோஷம், தாங்க நேர்ந்துவிடப்படும் மசரி அம்மனது சொத்தாகிவிட்ட ஆன்மாக்களான ஆடு, கோழி ஆகியவற்றை மடத்தரே கசாப்புக்கு வெளியில் விற்கும் பணத்திற்கு அவல நிலையையும் சமண காந்தி வழி சென்ற ஆண்டமுத்துக்கவுண்டர் ஏற்படுத்தி, மடத்தின் சக்தியாகிய மசரி பட்டினி போடப்பட்டதால், மட பூஜைகளை செய்ய இயலாதவாறு நின்றுள்ளது.
சமண களப்பிரனான அச்சுத களப்பாளனை ஒழித்துத் தமிழ் கூறும் நல்லுலகை மீட்ட சைவப்பேரொளியான, இறைவனுக்கே சுட்டிறைச்சி படைத்த கண்ணப்ப நாயனாரது வேட்டுவக்கவுண்ட வம்சமே காந்தி சமணத்தின் அடிமையானதே மடப்பூஜைகள் நின்று மடத்தார் அருகி வருவதன் காரணம்: https://kongukulagurus.blogspot.com/2009/09/52_1.html?m=1
இதனை நான் அப்பிச்சிமாரால் உயிர்நீத்துப் பாதுகாக்கப்பட்ட பூந்துறை நாட்டுக்கவுண்டர்களது ஒரு வாரிசு என்ற விதத்தில், அனைத்து மட வாரிசுகளுக்குச் சொல்லியும், ஆகம ரீதியாக விளக்கியும், மடாதிபதிகளிடம் அழைத்துச்சென்று உளமுடையான் ஏடுகளில் பார்த்துக்கூறியும், அனைவரும் ஒருவருக்கொருவர் போட்டியால் பின்வாங்குகின்றனர்:
திருச்செங்கோடு அர்த்தனாரீஶ்வரரே அருள வேண்டும்.










Comments
Post a Comment